Farewell Chief Justice D.Y. Chandrachud

Advertisment

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். இவர் வருகிற நவம்பர் 10ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டதன் பேரில், உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நவம்பர் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

நவம்பர் 10ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் நிறைவு பெற்றாலும், வார நாட்கள் வரவிருப்பதால், இன்றைய நாள் அவரது இறுதி பணி நாளாக அமைந்துவிட்டது. இதனால், இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப்பேசிய டி.ஒய்.சந்திரசூட், “நேற்று மாலை, நிகழ்ச்சியை எப்போது நடத்த வேண்டும் என்று எனது பதிவாளர் நீதித்துறை அதிகாரி என்னிடம் கேட்டபோது, ​​நிறைய பொருட்களை எடுக்க வேண்டும் என்பதால் மதியம் 2 மணி என்று கூறினேன். வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு இந்த நீதிமன்றத்தில் யாராவது இருப்பார்களா என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். நான் இந்த நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்போது எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் நீதிபதி கண்ணாவைப் போன்ற ஒரு நிலையான நபர் பொறுப்பேற்பார். அவர் மிகவும் கண்ணியமானவர்.

Advertisment

இது நீதியின் பயணம். உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு சட்டம் மற்றும் வாழ்க்கையைப் பற்றி நிறைய கற்றுக் கொடுத்தீர்கள். இன்று நான் நடத்திய 45 வழக்குகளில் வாழ்க்கையைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். உங்களில் யாரையாவது நான் எப்போதாவது காயப்படுத்தியிருந்தால், நான் உங்களைத் துன்புறுத்த விரும்பாத என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறினார்.