நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் ஓடிக் கொண்டிருந்த போது, திரையரங்கின் திரை திடீரென தீப்பற்றி எரிந்தது.
புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டு பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் திரையிடப்பட்டது. இரவு காட்சியில் ஏராளமானோர் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, திரையரங்கின் திரை திடீரென தீப்பற்றியது. இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் வேகமாக திரையரங்கை விட்டு அலறியடித்தபடி வெளியேறினர்.
தகவலறிந்து தீயணைப்புத்துறையினர், அங்கு வருவதற்குள் திரை முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த விபத்திற்கு மின்கசிவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.