உ.பி-யில் ஒரு குடும்பத்தினர் கழிவறையை சமயலறையாக பயன்படுத்தி வரும் அதிர்ச்சி சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் பிரகாஷ். இவருக்கு அங்கிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளை சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Advertisment

df

அப்போது ராம் பிரகாஷ் தனக்கு வழக்கப்பட்டிருந்த கழிவறையை சமையல் கூடமாக மாற்றி அதை பயன்படுத்தி வந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்ததில், அவருக்கு வசிப்பதற்கு முறையான வீடு இல்லாத காரணத்தால் அவர் கழிவறையை வீடாக பயன்படுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து அடுத்தகட்ட விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.