Skip to main content

பணக்காரர்களை ஈர்த்த போலி சாமியார்... கைது செய்த காவல்துறையினர்!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021
Fake preacher who attracted rich people ... Police arrested

 

‘என்னுடன் பாலியல் உறவு கொண்டால் பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும்,’ என கூறி பெண்களை துன்புறுத்திய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி தெலங்கானா மாநிலம், நல்லகொண்டா மாவட்டத்தில் டி.ஐ.ஜி ஏ.வி.ரங்கநாத் கூறியதாவது, “தெலங்கானா மாநிலம், நல்லகொண்டா மாவட்டம், பி.ஏ.பள்ளி அடுத்த அஜ்மாபூர் கிராமத்தில் ‘ஸ்ரீ சாய் சர்வஸ்வாமு சாய் மான்சி தொண்டு அறக்கட்டளை’ என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து பக்தர்களிடம் யாகம், பூஜைகள் செய்வதாக கூறி ஏமாற்றி போலி சாமியார் சாய் விஸ்வ சைதன்யா பணம் பறித்துள்ளார். மேலும், பல பெண் பக்தர்களை வசியப்படுத்தி தகாத உறவு வைத்துள்ளளார். ‘சாய்பாபாவின் தீர்க்க தரிசனம்’என்ற பெயரால் வசதியான பக்தர்களை ஈர்த்து பணம் பறித்துள்ளார். போலி மூலிகைகள், லேகியம், எண்ணெய் ஆகியவற்றை உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று விற்பனை செய்துள்ளார்.

 

ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் நந்திகாமாவை சேர்ந்த இவர், ஐதராபாத்தில் கடந்த 2002ம் ஆண்டு கம்யூட்டர் மையத்தை அமைத்துள்ளார். பொதுமக்களிடம் சீட்டு பிடிப்பதாக கூறி 1 கோடி பெற்று  ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த இவர்,  சாய்பாபா பக்தராகி தனியார் தொலைக்காட்சியில் சொற்பொழிவு ஆற்றினார். இதையடுத்து, தீர்க்க தரிசனம் என்ற பெயரில் வீடியோக்கள் எடுத்து தானாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார். என்னுடன் உடலுறவு கொண்டால் பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என கூறி பல பெண்களுடன் ஆசிரமத்தில் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

 

புகார்கள் அடிப்படையில் சைதன்யா, அனந்தபுரத்தை சேர்ந்த வீடியோ எடிட்டர் கவுதம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக இருந்த கம்மத்தை சேர்ந்த ஸ்ருஜன் குமார்,  ஆக்குதோடப்பள்ளியை சேர்ந்த  டிரைவர் விஜய்  ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து 26 லட்சம் ரொக்கம், 500 கிராம் தங்க நகைகள், போலி சாமியாரின் 2வது மனைவி சுஜாதா மீது உள்ள 1.50 கோடி மதிப்பிலான பத்திரங்கள், 17 ஏக்கர் நிலம், யூடியூப் சேனலுக்கு பயன்படுத்திய 7 லேப்டாப்கள், 4 செல்போன்கள், 1 கார் பல்வேறு வகையான மூலிகைகள், பூஜை  பொருட்கள், 50 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.