wastapp

Advertisment

போலிசெய்திகள் வாட்ஸ் ஆப்செயலியில் பகிரப்படுவதை தடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசு வாட்ஸாப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் தொடர்ந்து குழந்தை கடத்தவந்ததாக பல நபர்கள் தாக்கப்பட்டு உயிரிழிந்த சம்பவம் அதிகரித்து வருகின்ற நிலையில் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவோரையும், தவறான செய்திகளை பரப்புவோரையும் கண்காணித்து மாநில அரசுகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் இதுபோன்ற போலியான செய்திகள் அதிகமாக வாட்ஸ் ஆப்எனப்படும் சமூக வலைதள செயலியே முக்கிய பங்காற்றுகிறது எனவே போலியான செய்திகள் பகிரப்படுவதைதடுக்க தொழிநுட்பமுறையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

தமிழகம் மற்றும் வடமாநிலங்களான ராஜஸ்தான்,உத்திரபிரதேசம், தெலுங்கானாஎன பல மாநிலங்களில் குழந்தைகளை கடத்துவதற்காக பலர் களம் இறங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அதை தொடர்ந்து பல வடமாநில நபர்கள் குழந்தையை கடந்த வந்தவர்கள் என பலர் கடும் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளனர்.கடந்த மாதம் மட்டும் 30 பேர் குழந்தை கடத்த வந்தவர்கள் என பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளனர். மேலும் 20க்கும்மேற்பட்டோர்இறந்துள்ளனர்.இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல் பொதுமக்களும் போலிசெய்திகளை நம்பி சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது எனவும் அறிவித்துள்ளது.