ADVERTISEMENT

மராட்டிய முன்னாள் முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி!

09:01 PM Oct 24, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 4 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாக பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் என கரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடவுள் தனக்கு ஒய்வு கொடுத்துள்ளதாக அவர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT