Skip to main content

ஓடும் ரயிலில் துப்பாக்கிச் சூடு; முன்னாள் ராணுவ வீரர் கைது 

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

Ex-serviceman arrested for illegal activities in train

 

மேற்கு வங்க மாநிலம், தன்பாத் பகுதியில் இருந்து தலைநகர் டெல்லி, சியல்டா பகுதி வரை செல்லும் ராஜ்தானி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் நேற்று (13-10-23) காலை இந்த விரைவு ரயில் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலில், டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் சோதனை மேற்கொண்டு வந்தார்.

 

அதன்படி, டிக்கெட் பரிசோதகர் பி-8 பெட்டியில் இருந்த பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டு இருந்தார். அப்போது, 41 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டபோது அவர், ஹவுரா செல்லும் ரயிலின் டிக்கெட்டை காண்பித்து தனக்கு இருக்கை ஒதுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு, டிக்கெட் பரிசோதகர் அவரிடம், சரியான டிக்கெட் இல்லாததால் இருக்கை ஒதுக்க முடியது என்று கூறியுள்ளார். இதனால், அந்த பயணி டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, டிக்கெட் பரிசோதகருக்கும் பயணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பயணி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரயில் பெட்டிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால், அந்த பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் பதற்றமடைந்தனர். 

 

உடனடியாக, டிக்கெட் பரிசோதகர் இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் கோடர்மா ரயில் நிலையத்தில் பயணியை கைது செய்வதற்கு தயாராக இருந்தனர். அதன்படி, ரயில் கோடர்மா நிலையத்திற்கு வந்த போது, பயணியை ரயிலில் இருந்து இறக்கி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அப்பயணியின் பெயர் ஹர்விந்தர் சிங் (41) என்பது தெரியவந்தது. மேலும், அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. 

 

இதையடுத்து, ஹர்வீந்தர் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கிழக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹர்வீந்தர் சிங் டிக்கெட் எடுத்திருந்த போதும், தவறான ரயிலில் பயணித்ததே இந்த குழப்பத்திற்கு காரணம். மேலும், ஹர்வீந்தர் சிங் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் எந்த பயணிக்கும் காயமோ, உயிருக்கு ஆபத்தோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.