ADVERTISEMENT

மத்திய அரசின் உணர்வற்ற தன்மையால் விலகுகிறேன்! - முன்னாள் எம்.பி. அறிவிப்பு!

06:30 PM Dec 26, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 31வது நாளாக, தொடர்ந்து வருகிறது. மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததால் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்தநிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிந்தர் சிங் கல்சா, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து ஹரிந்தர் சிங் கல்சா, போராடும் விவசாயிகள், மனைவிகள் மற்றும் குழந்தைகள் படும் துன்பம் குறித்து உணர்வற்ற தன்மையைக் காட்டிய கட்சித் தலைவர்களையும், அரசையும் கண்டித்து பாஜகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ஹரிந்தர் சிங் கல்சா, கடந்த 2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு ஆம் ஆத்மியிலிருந்து விலகி 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT