Skip to main content

“புதுச்சேரி அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்” - முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

ex cm Narayanasamy  insisted  Puducherry government should enact emergency law prevent online gambling

 

புதுச்சேரி அரசு உடனடியாக  சட்டமன்றத்தைக் கூட்டி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை  செய்வதற்கான கோப்புகளைத் தமிழக ஆளுநருக்கு அரசு அனுப்பியும் இதுவரை ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தை சில ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே நடத்தி வருகின்றனர். இதனால் பல உயிர்கள் பலியாகி உள்ளன. உடனடியாக புதுச்சேரி அரசு சட்டமன்றத்தைக் கூட்டி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்.  இந்தியாவில் சண்டிகர் மாநிலத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடவில்லை. ஆனால் புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்று முதல்வரும் அமைச்சர்களும் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர்.

 

மின்துறை தனியார் மயமாக்கலை தடுப்பதற்காகத் தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படும்.  புதுச்சேரியில் கோவில், பள்ளிகள் அருகே ஏற்கனவே நிறைய மதுபான கடைகள் உள்ளன. தற்போது வருமானத்தை குறி வைத்து ரெஸ்ட்ரோ பார் என்ற பெயரில் குடியிருப்பு, கோவில், பள்ளிகள் அருகே திறக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரியில் கலாச்சார சீரழிவை முதலமைச்சர் ரங்கசாமி ஏற்படுத்தி வருகிறார். கோவில் மற்றும் பள்ளிகள் அருகே உள்ள மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். இதற்காக நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளேன்.

 

கலால் துறையில் இமாலய ஊழல் நடந்து வருகிறது. புதுவையில் குப்பை வாருவதில் ஊழல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல். இதுபோன்ற பல வகையான ஊழல் நடந்து வருகிறது. முதலமைச்சரிடம் கையொப்பம் வாங்க வேண்டும் என்றால் அதற்காக நான்கு புரோக்கர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மூலமாகத் தான் முதலமைச்சரை நாட முடிகிறது. அதில் ஒரு புரோக்கருக்கு கோடி கணக்கில் சொத்து உள்ளது அவரது பெயரைத் தேவைப்படும் பட்சத்தில் ஆதாரத்துடன் வெளியிடுவேன்.

 

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் சொன்னதில் எந்தவித தவறும் இல்லை. அந்தந்த கட்சியினரும் தனது ஆட்சி ஒரு மாநிலத்தில் மலர வேண்டும் என்று நினைப்பது நியாயம் தான். தமிழகத்தில் எந்த கூட்டணி தொடர்கிறதோ, புதுச்சேரியில் அதே கூட்டணி தொடரும்"  எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
State status for Puducherry Mallikarjuna Karke confirmed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார். 

Next Story

கணவன் முகமூடியுடன் களத்தில் இறங்கிய மனைவி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The wife entered the field with her husband masked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ்வேந்தன் மனைவி, அதிமுக கட்சியினருடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருடைய கணவர் தமிழ்வேந்தனின் முகமூடியை அணிந்தபடி அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''அதிமுகவில் ஒரு புதிய வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். ஒரு இளைஞருக்கு வேட்பாளராக வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அவருக்கு 34 வயது தான் ஆகிறது. அவர் என்னுடைய கணவர் என்பதை விடவும், இளைஞர் ஒருத்தர் தேர்தலில் நிற்கிறார் என்பதே முக்கியம்.
 

அவங்களோட வாக்குறுதிகள் இன்னும் எல்லாருக்கும் போய் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக நான் வந்திருக்கிறேன். போதைப்பொருளை ஒழிப்பதும், கல்வியை அனைவருக்கும் சமமாக்குவது என்பதுதான் அவருடைய இலக்காக இருக்கிறது. அவருக்கு சப்போர்ட்டாக இங்கு நான் வந்து இருக்கேன். மக்களுக்கு நல்லாவே தெரியும் ஆட்சியில் இருக்கின்ற பாஜகவாக இருக்கட்டும் எதிர்க்கட்சியாக இருக்கட்டும் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. அவர்களுக்கு எதுக்கு இன்னொரு வாய்ப்பு. ஆட்சிக்கு வரும்போது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால் எதுவும் செய்யவில்லை. அதனால் தான் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியாக இருக்கட்டும் அன்பழகனாக இருக்கட்டும் அவர்கள் ஒரு நல்ல வாய்ப்பை எனது கணவருக்கு கொடுத்துள்ளார்கள்''என்றார்.