Advertisment

டிஆர்பி முறைகேடு - கைது செய்யப்பட்ட முன்னாள் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி!

j

Advertisment

டிஆர்பி முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பார்க் தலைமை அதிகாரி பார்தோ தாஸ்குப்தா உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொலைக்காட்சி சேனல்கள் எவ்வளவு மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது என்பதை கணக்கிட பார்க் என்ற அமைப்பு இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிர்வாகத்துக்கு கீழே இது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளுக்கு பார்க் அளித்த டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு நடைபெற்றதாக செய்திகள் வந்தது. இதனையடுத்து அந்த அமைப்பின் தலைமை அதிகாரி பார்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சக்கரையின் அளவு அதிகரித்த காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Scam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe