Skip to main content

எவரெஸ்ட் சிகரத்தை தாக்கிய ஃபானி புயல் !

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

ஃபானி புயல் நேற்று ஒடிசாவை புரட்டிப்போட்டது. இந்த புயலின் தாக்கம் எவரெஸ்ட் சிகரம் வரை சென்றிருக்கிறது. அங்குள்ள 20 முகாம்கள் காற்றில் பறந்திருக்கின்றனர். வங்கக்கடலில் உருவான ஃபானி புயலானது சென்னை வழியே கரையை கடந்து தமிழகத்திற்கு நல்ல மழை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒடிசா மாநிலத்தில் புயல் கரையை கடந்து அதிக மழையும் , சற்று அழிவையும் ஃபானி புயல் அளித்துக்கொண்டிருக்கிறது. இந்த புயலால் ஒடிசா மாநிலத்தில் மரங்களும் , மின் கம்பங்களும் புயலின் தாக்குதலால் மிகுந்த சேதம் அடைந்துள்ளனர்.

 

 

FANI CYCLONE

 

 

 

இதனால் தொலைத்தொடர்பு மற்றும் மின் வசதிகள் உள்ளிட்டவை புவனேஸ்வர் மற்றும் பூரி மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் அங்கு 6400 மீட்டர் உயரத்தில் இரண்டாவது மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஃபானி புயலால் 20 முகாம்கள் காற்றில் பறந்துள்ளனர். இருப்பினும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து எவரெஸ்ட் ட்ரெக்கிங் நிறுவனங்களுக்கு நேபாள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்ரெக்கிங் செல்வோரின் பாதுகாப்பை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் ஆந்திராவில் அதிக சேதத்தை புயல் ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் ஒடிசாவில் உடனடியாக தொலைத்தொடர்பு வசதிகள் உடனடியாக சீர் செய்யப்படும் என ஏர்டெல் , வோடாபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலையில் தொடரும் சோகம்!

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
Tragedy continues in Velliangiri Hill

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ரகுராம் அடிக்கடி ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வரும் பழக்கம் உடையவர் என்று சொல்லப்படுகிறது. அதன்படி கடந்த 29 ஆம் தேதி சென்னையில் இருந்து நண்பர்கள் 15 பேருடன் புறப்பட்டு கோவை வந்தடைந்த இவர் வெள்ளியங்கிரி மலை ஏற தொடங்கிய நிலையில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இவர் நீரிழிவு நோயாளி என்றும் சொல்லப்படுகிறது. கடந்த மாதம் முதல் இதுவரை 5க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தொடரும் சோகம்; வெள்ளியங்கிரி மலையேறுவோர் கவனத்திற்கு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Ongoing Tragedy; Attention Velliangiri Mountaineers

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி  மலை  மீது ஏற முயன்ற மூன்று பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (68) வயது. மருத்துவரான இவர் நேற்று நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். இன்று காலை நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த மூன்று பேரின் சடலங்களையும் கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 3 பேர் இதற்கு முன்னதாகவே இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதயக் கோளாறு, மூச்சுத்திணறல் பாதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.