முதல்வர் பதவியில் இருந்தும்எனக்கு நிம்மதியும், சந்தோஷமும்இல்லை என கர்நாடக முதல்வர் குமாரசாமி மேடையில் கண்ணீர் வடித்துள்ளார்.
கடந்த கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்து பல இழுபறிகளுக்கு பின் காங்கிரஸ் கூட்டணியுடன் முதவரானார் ஜனதா தளம் கட்சி தலைவர்குமாரசாமி.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நேற்றுஜனதா தளம்பூத்உறுப்பினர்ககளாக பணியாற்றிவர்களுக்கும், தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள், மந்திரிகள் ஆகியோருக்கும் பெங்களூருவில் உள்ள ஜேபி பவனில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டுவிழாவில் ஜனதா தளம் சார்ந்தமந்திரிகள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி,
என் உடல் நலத்தையும் பாராமல் கட்சிப்பணிகளில் இறங்கி வேலைசெய்தேன். மக்களுக்கு நல்ல, மக்கள் விரும்பக்கூடிய ஒரு ஆட்சியை தரவேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் ஜனதா தளம் சொன்ன வாக்குறுதிகளை மக்கள் ஏற்கவில்லை ஜனதா தளத்தை மக்கள் நிராகரித்து விட்டார்கள்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
எனது தந்தை, தாய் ஆசிர்வாதத்தால், கடவுளின் அருளால் முதல்வரானேன். 37 எம்.எல்.ஏக்களும் நல்ல ஆதரவை கொடுத்தார்கள். அதேபோல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதரவால் முதல்வராகியுள்ளேன். ஆனால் தற்பொழுது எனக்கும் கொஞ்சம் கூட மகிழ்ச்சியில்லை. பதவி ஏற்ற இந்த இரண்டு மாதத்தில் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன் எனக்கூறி மேடையில் கண்ணீர் வடித்தார் முதல்வர் குமாரசாமி.