Skip to main content

பினராயி விஜயனை வழக்கில் சேர்க்க அமலாக்கத்துறை முயற்சியா? - ஸ்வப்னா சுரேஷ் ஆடியோவால் பரபரப்பு!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

         

Is the Enforcement Department trying to add pinarayi vijayan to the case? Excitement by Swapna Suresh Audio!

 

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ், முதல்வாின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன், சந்தீப் மற்றும் ரியாஸ் உட்பட 5 போ் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ளனா்.

 

மேலும், 33 போ் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளனர். இதில், முக்கியமானவா்களாக கேரள உயா்கல்வித்துறை மந்திாி ஜலீல் இரண்டு முறை விசாாிக்கப்பட்டுள்ளாா். அதேபோல், கூடுதல் முதன்மைச் செயலாளா் ரவீந்திரன் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவருக்குக் கரோனா தொற்று இருந்ததால் தற்போது அவா் சிகிச்சையில் உள்ளார். இதனால் அவா் அமலாக்கத்துறை கண்காணிப்பில் உள்ளார்.


இந்நிலையில், திருவனந்தபுரம் அட்டங்குளங்கரை மகளிர் சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷின் ஆடியோ ஒன்று 'தி க்யூவ்' இணையதள சேனலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஸ்வப்னா, "அமலாக்கத்துறை இயக்குனா் என்னை மிரட்டி நெருக்கடி தருவதாகவும், பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க வேண்டுமென்றும் அப்படிக் கொடுத்தால் தன்னை அப்ரூவராக்குவதாகவும் கட்டாயப்படுத்துகிறாா். அதேபோல், அவா்களாகவே ஒரு வாக்கு மூலத்தை தயாாித்து அதை என்னைப் படிக்கக் கூட விடாமல் கையெழுத்தை மட்டும் வாங்கித் தாக்கல் செய்து இருக்கிறாா்கள்.

மேலும், துபாயில் பினராயி விஜயனுக்கு கமிஷன் கொடுப்பது சம்மந்தமாக நானும் சிவசங்கரனும் பேசிக் கொண்டதாகவும் ஒரு வாக்குமூலத்தைக் கேட்டனா். இதை நான் சம்மதிக்கவில்லை" என அந்த ஆடியோவில் பேசியுள்ளாா். இது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படு்தியுள்ளது. இந்நிலையில், பினராயி விஜயன் தன்னையையும், தன்னுடைய மந்திாிகளையும் காப்பாற்றுவதற்காகத்தான் இப்படித் திட்டமிட்டுச் சித்தாிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளாா். சிறையில் பாதுகாப்போடு இருக்கும் ஸ்வப்னாவால் எப்படி இந்த மாதிாி ஆடியோவை வெளியிட முடியும் என்று பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கிடையில், ஸவப்னா 10 வாா்த்தைகளில் 9 வாா்த்தைகள் ஆங்கிலத்தில் தான் பேசுவார் முழுக்க முழுக்க மலையாளத்தில் பேசுவது கிடையாது. ஆனால், இந்த ஆடியோ முழுவதும் மலையாளத்தில் தான் பேசப்பட்டுள்ளது. எனவே, இது ஸ்வப்னாவின் குரல் இல்லையென்று அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.