Skip to main content

ஐபிஎல்-ல் விளையாடிய 'மின்வெட்டு'-மும்பையை வறுத்தெடுக்கும் மீம்ஸ்கள்!

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

ipl

'

ஐபிஎல் 2022' கிரிக்கெட் திருவிழா 10 அணிகளுடன் தொடங்கி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த பொழுது ஏற்பட்ட திடீர் மின்வெட்டும், அதனால் டி.ஆர்.எஸ் கேட்க முடியாமல் சென்னை வீரர் டெவோன் கான்வே ஆட்டமிழந்ததும் உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 59 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. புள்ளி பட்டியலில் சென்னை அணி அதலபாதாளத்தில் இருக்கும் நிலையில் இந்த போட்டி மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட்டது. இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. சென்னை அணியில் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கிய நிலையில் 7 ரன்கள் எடுத்த ருதுராஜ், டேனியல் பந்துவீச்சில் கீப்பர் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

அதேபோல் மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யு முறையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலியும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பாவும் எல்.பி.டபிள்யு முறையில் ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழக்க, நிலைகுலைந்து சென்னை. இந்த ஆட்டத்தில் கடைசி வரை  நின்று ஆடிய சென்னை அணியின் கேப்டன் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 36 ரன்களை எடுத்தார். 103 ரன்களை மும்பை இந்தியன்சுக்கு இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

 

அடுத்து களமிறங்கிய மும்பை அணி 15 வது ஓவரிலேயே 103 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே, டேனியல் சாம்ஸ் ஓவரில் முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தது செல்லாது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். டெவான் கான்வேவுக்கு நடுவர் அவுட் கொடுத்ததில் சந்தேகம் இருந்ததால் அவர், டி.ஆர்.எஸ். மூலம் மூன்றாவது நடுவரிடம் ரிவியூ கேட்க முற்பட்டார்.

 

'Electricity break' played in IPL-Mumbai roasting memes!

 

அந்த நேரத்தில் மைதானத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் செயல்படவில்லை எனக்கூறி நடுவர் அளித்த தீர்ப்பே இறுதியானது என்று அறிவிக்கப்பட்டது. மின்வெட்டு காரணமாகவே சென்னை அணி தோற்றுவிட்டதாகக் கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். அதுவும் மின்வெட்டு காரணமாகவே சென்னை தோற்றதாக குமுறும் ரசிகர்கள் மும்பை மின்வெட்டு தொடர்பான மீம்ஸ்களை வெளியிட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராடித் தோற்ற மும்பை இந்தியன்ஸ்; முதல் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sun risers won the match ipl live score update mi vs srh

ஐபிஎல் 2024 இன் 8ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார். அபிஷேக் ஷர்மா ஹெட்டை மிஞ்சும் அளவுக்கு அதிரடியில் கலக்கி 7 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிளாசனும் தன் பங்கிற்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன்  34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 28 பந்துகளில்  42 ரன்கள் எடுத்தார்.

இறுதியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்பு கெயில் 175 அடித்த  அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 263 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தது.

அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தனர். இஷான் 13 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்தார். ரோஹித் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த திலக் வர்மா மற்றும் நமன் திர் இணையும் அதிரடியைத் தொடர்ந்தது. இருவரும் இணைந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் பாண்டியாவுடன் டிம் டேவிட் இணைந்தார். கேப்டன் பாண்டியா முதலிரண்டு பந்துகளில் அதிரடி காட்டி பின்னர் ரன் எடுக்க திணறினார். ஆனால் டிம் டேவிட் ஓரளவு அதிரடி காட்டி 42 ரன்கள் எடுத்தார். முதல் முறையாக களமிறங்கிய ஷெபெர்டு 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களே மும்பை அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் சன் ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் மும்பை அடித்த 246 ரன்களும் சேர்த்து ஒரு டி20 இல் இரு அணிகளும் சேர்த்து அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Next Story

ஐ.பி.எல். இறுதிப் போட்டி; வெளியான முக்கிய தகவல்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
IPL Finals; Important information released

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதாவது முதலில் ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதன்படி நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட, கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக மே 21ஆம் தேதி முதல் தகுதிச் சுற்று அகமதாபாத்திலும், மே 24 ஆம் தேதி இரண்டாம் தகுதிச் சுற்று சென்னையிலும் நடைபெற உள்ளது. இதற்கிடையே எலிமினேட்டர் சுற்று மே 22ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே சென்னையில் கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றிருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.