Skip to main content

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு தடை!!!

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
election commission


சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 12ஆம் தேதியும், 20ஆம் தேதியும் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல, மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் 28ஆம் தேதி வாக்குப் பதிவும், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7ஆம் தேதி வாக்குப் பதிவும் நடைபெற உள்ளது. 
 

இந்நிலையில், வரும் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி அதாவது இறுதிக்கட்ட வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடத் தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்