Skip to main content

இளைஞர்களை ஏமாற்றி 5000 கோடி ரூபாய் மோசடி... பிரபல தொழிலதிபர் அதிரடி கைது...

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

இந்தியா முழுவதும் 17 லட்சம் பேருக்கு மேற்பட்டோரிடம் சுமார் 5,000 கோடி ரூபாய் மோசடி செய்த eBiz.com நிறுவனர் மற்றும் அவரது மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ebiz founder arrested

 

 

கடந்த 2001ம் ஆண்டு இளைஞர்களை மையமாகக் கொண்டு டெல்லியில் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். MLM வகை தொழில்முறையை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனத்தில் முதலில் 16,821 ரூபாயை செலுத்த வேண்டும். பின்னர், அவர்கள் சேர்த்துவிடும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 4% கமிஷன் கொடுக்கப்பட்டுவந்தது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கிலான இளைஞர்கள் இணைந்தனர்.

குறிப்பாக கல்லூரி மாணவர்கள், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் இதில் ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்தனர். இந்நிலையில், இந்நிறுவனம் மோசடி செய்துள்ளதாக சைபராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விசாரணையை ஆரம்பித்த போலீசார் இந்த மோசடி குறித்து கண்டறிந்து, இந்த நிறுவனத்தின் நிறுவனரான பவன் மல்ஹான் மற்றும் அவரது மகன் ஹித்திக் மல்ஹான் ஆகியோரை கைது செய்ததுடன், நிறுவனத்தின் டெல்லி தலைமையகத்துக்கு சீல் வைத்தனர். மேலும் அவரது வங்கிக்கணக்கில் உள்ள 398 கோடி ரூபாயையும் முடக்கினர்.

டெல்லி ஐஐடியில் கணிதம் மற்றும் இயற்பியலில் பிஎச்டி முடித்துள்ள பவன் மல்ஹான் கனடாவைச் சேர்ந்த Skybiz என்ற நிறுவனத்தில் சேர்ந்து  பணியாற்றினார். பின்னர் இந்தியா வந்த அவர், இளைஞர்களை குறிவைத்து eBiz.com என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கினார்.

MLM முறைக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பினால்  இந்நிறுவனத்தின் கிளைகளை ஹைதராபாத், சென்னை, பெங்களூரு மற்றும் உத்தர பிரதேசம், மஹாராஸ்டிரா, கோவா, ஜம்மு&காஷ்மீர் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தினார். தற்போது தந்தை, மகன் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ள இந்த செய்தி, இந்நிறுவனத்தை நம்பி பணம் செலுத்தியவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.