தமிழகத்தில் இந்த வருடம் ஜனவரி முதல் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டது. அதன்படி இந்த தடை அமல்படுத்தப்பட்ட இந்த 10 மாத காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு வெகுவாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சமீப காலமாக மீண்டும் பிளாஸ்டிக் பொருள்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே, இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து சட்டமியற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் பிளாஸ்டிக்கு மாற்றாக ஈட்டபிள் கப்களை ஜினோம்லேப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கப்கள் முழுக்க முழுக்க தானியங்களால் செய்யப்பட்டது என்றும், செயற்கை வண்ணங்களோ பொருட்களோ கலக்காமல் தயாரிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 40 நிமிடம் வரை இது நமத்துபோகாமல் இருக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சூடான மற்றும் குளிர்ச்சியான பானங்கள் இரண்டையும் இதில் பயன்படுத்தலாம். தற்போது இந்த வகைக் கப்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. விரைவில் இதைத் தயாரிக இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.