மகாராஷ்டிராவில் மீண்டும் நிலநடுக்கம்...

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

ghfgfh

இதே பால்கர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தொடர்ந்து 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் புகுந்தனர். தற்போது மீண்டும் அந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

earthquake Maharashtra
இதையும் படியுங்கள்
Subscribe