தெலங்கானா மாநிலத்தில் இன்று (23.10.2021) மதியம் 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின்கரீம்நகர் மாவட்டத்திலிருந்து 45 கிலோமீட்டர் வடகிழக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால்உயிரிழப்பு ஏற்பட்டதாகவோஅல்லது சேதம் ஏற்பட்டதாகவோஎந்த தகவலும் வெளியாகவில்லை.