Skip to main content

3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர்,47 நாட்கள் பயணம்... நிலவில் சந்திரயான்-2!

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

நிலவில் கால் பதிக்கும் இந்தியாவின் வரலாற்று பயணம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. சந்திரயான் 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான நிலவில் தென் துருவத்தில் தரை இறங்குவிருக்கிறது விக்ரம் லேண்டர். நிலவின் தென் துருவத்தில் மான்சினஸ்-சி சிம்பிலிஸ்-எஸ்  என்ற பள்ளத்தாக்குகளுக்கு நடுவே தரை இறங்க இருக்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து ஜூலை 24ம் தேதி தனது முதல் வட்ட பாதையை வெற்றிகரமாக கடந்து சென்ற ஆண்டு சந்திரயான் -2 கடந்த 14ஆம் தேதி புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகிய சந்திரயான்-2 நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. இதையடுத்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி சந்திரயான்-2 நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது. ஆகஸ்டு 22 ஆம் தேதி அன்று நிலவின் முதல் புகைப்படத்தை சந்திரயான்-2 பூமிக்கு அனுப்பியது.

 

chandtayan2


ஆகஸ்டு 26-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிலவின் படத்தை அனுப்பியது சந்திரயான்-2, செப்டம்பர் 2 ஆம் தேதி சந்திரயான்- 2 விண்கலத்தின் ஆர்பிட்டரலிருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. முதல்முறையாக செப்டம்பர் 3 ஆம் தேதி லேண்டர் விக்ரமின் சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்டது. இரண்டாவது முறையாக 4 தேதி சுற்றுவட்ட பாதை மீண்டும் வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. 

பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் விக்ரம் லேண்டர் நிலவில் எப்படி தரையிறங்கும், அதிலுள்ள பாகங்கள் நிலவில் உள்ள சரியான இடத்தை கண்டறிந்து எவ்வாறு தரையிறங்கும் என்பது குறித்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

 

chandtayan2

 

இன்று அதிகாலை 1.30 மணி முதல் இரண்டு முப்பது மணிக்குள் நிலவைத் தொட ஆயத்தமாகி வருகிறது விக்ரம் லேண்டர். தரையிறங்கிய பிறகு அது சுமந்து செல்லும் பிரக்யான் ரோவர் அதிகாலை ஐந்து முப்பது மணி முதல் ஆறு முப்பது மணிக்குள் வெளியே வரும். முதலில் லேண்டர் சந்திரனின் தெற்கு பகுதியில் சுமார் 70 டிகிரி அட்சரேகையில் இரண்டு பள்ளங்களுக்கு இடையே உள்ள உயரமான சமவெளிப் பகுதியில் தரையிறக்கப்படும். 1471 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டரில் உயர் தொழில்நுட்பமான லேண்டர் போசிஷன் டிடெக்ஷன் கேமரா, லேண்டர் ஹாரிசாண்டல் வெலாஸிட்டி கேமரா மற்றும் லேண்டர் அஸர்ட் கேமரா ஆகிய மூன்று high-resolution கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நிலவின் மேற்பரப்பில் சரியான இடத்தை தேர்வு செய்து நிலவு பகுதியில் தரை இறங்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இந்த கேமராக்கள் உதவுகின்றன. 

 

chandtayan2

 

நிலவில் தரை இறங்கும்போது விக்ரம் இருக்கும் நிலைக்கும் எவ்வளவு தூரம் இடைவெளி இருக்கிறது என்பதை கணக்கிடும் ஆல்டி மீட்டர் விக்ரமுடன் இணைக்கப்பட்டிருக்கும்.   நிலவின்  மேற்பரப்பின் வடிவத்தைப் பற்றி லேசர் அல்டி மீட்டர் கணக்கில் அந்த நேரத்தில் லேண்டரில்  உள்ள கேமராக்கள் பிரக்யான் ரோவரை தாங்கி நிலையாக நிறுத்த உதவும். இரண்டு எஞ்சின்கள் கீழிறங்குவது உணரக்கூடிய சென்சார்கள் மற்றும் சோலார் பேனல்கள் ஆகியவை செயல்பட தொடங்கும்.

 

chandtayan2

 

இத்தனை கருவிகளும்  பிரக்யானை கீழிறக்க உகந்த சூழல் இருப்பதை உறுதி செய்த பின்னரே விக்ரம் தரையிறக்கும். விக்ரம் தரையிறங்குவதற்கு முன்புவரை சந்திரயான்-2 பூமியிலிருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ககன்யான் திட்டம்; விண்வெளி வீரராகத் தமிழர் தேர்வு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
gaganyan Project Tamil chosen as an astronaut

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு இதுவரையில் மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வகையில் இந்தச் சாதனையைப் படைக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காகக் கடந்த 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் ரஷ்யாவில் 14 மாதங்கள் பயிற்சி பெற்று ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த குழுவில், குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு ககன்யான் திட்டத்திற்கான லோகோவை பிரதமர் மோடி வழங்கினார்.

இது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில், “2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனி ஆய்வு மையம் அமையவுள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராக்கெட் மூலம் இந்தியர்கள் நிலவில் கால் பதிப்பர். 4 இந்திய விண்வெளி வீரர்களுக்கு லோகோவை ஒப்படைத்தது எனக்கு மிகவும் சிறப்பான தருணம் ஆகும். இது 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோரால் இந்தியா பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

gaganyan Project Tamil chosen as an astronaut

இந்நிலையில், ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 பேரில் ஒருவர் தமிழர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். சென்னையில் பிறந்த இவர் உதகையில் உள்ள வெலிங்கடன் ராணுவ கல்லூரியில் பயின்றவர் ஆவார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் கடந்த 2003 ஆம் ஆண்டு விமானப் படையில் பணியில் இணைந்தார். இந்திய விமானப் படையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர் இந்திய விமானப் படையின் புதிய போர் விமானங்களின் டெஸ்டிங் பைலட்டாகவும் பணியாற்றி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.