Advertisment

கேரளாவில் இடுக்கி அணை திறப்பு...

idukki dam

Advertisment

கடந்த ஆக்ஸ்ட் மாதம் கேரளாவில் பெய்த கனமழையால் 25 ஆண்டுகள் கழித்து இடுக்கி அணை திறக்கப்பட்டது. இதனை அடுத்து கேரளாவே வெள்ளக்காடாக மாறியது. கேரளாவில் தற்போது மீண்டும் பலத்த கனமழை பெய்து வருகிறது இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையில் ஒரு ஷட்டர் திறந்து, விநாடிக்கு 50,000 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கேரள அரசு. இதுமட்டும் இன்றி கேரளாவில் 11 அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 7ஆம் தேதி மற்றும் 8ஆம் தேதி பலத்த கனமழை கேரளாவில் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

idukki kerala flood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe