Advertisment

திருமண அழைப்பிதழில் நூதன முறையில் போதை பொருட்கள் கடத்தல்... அதிகாரிகள் வியப்பு!

திருமண அழைப்பிதழில் போதை பொருள் கடத்தி எடுத்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கெம்பா கவுடா விமான நிலையத்தில் சரக்கு பெட்டக அறைகளில் அதிகாரிகள் வழக்கமான சோதனைகளை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பார்சலில் துகள்கள் போன்ற பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் அதிகாரிகள் அந்த பெட்டியை ஸ்கேன் சோதனை செய்த போது அதில் திருமண கவர்கள்பேக் செய்யப்பட்டுஇருந்துள்ளதை கண்டறித்துள்ளார்கள்.

Advertisment

jk

இதனால் அந்த பார்சலை பிரித்து பார்த்ததில் அந்த பெட்டி முழுவதும் போதை பொருட்கள் தூளாக்கப்பட்டு கடத்தப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நூறுக்கும் மேற்பட்ட கவர்களில் 1.5 கிலோ எடைகொண்ட போதை வஸ்துக்கள் கடத்தப்பட இருந்ததாகவும் இதன் மதிப்பு பல லட்சங்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை யார் கடந்த முற்பட்டார்கள் என்ற ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

VIRAL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe