Skip to main content

4 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை; கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

droupadi murmu action taked four years old maharashtra girl incident

 

மகாராஷ்டிராவில் கடந்த 2008 ஆம் ஆண்டு 4 வயது சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த வசந்த சம்பத் துபாரே (அப்போதைய வயது 55) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கற்களால் தாக்கி சிறுமியைக் கொலை செய்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை நீதிமன்றம் சம்பத் துபாரேவுக்கு 2014 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

 

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் மும்பை உயர்நீதிமன்றமும் விசாரணை நீதிமன்ற விதித்த தீர்ப்பை உறுதி செய்தது. அதன்பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கடந்த 2017 ஆண்டு சம்பத் துபாரேவின் மனுவை தள்ளுபடி செய்து அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.

 

இறுதியாக சம்பத் துபாரே தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பினார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்த இந்த மனுவை குடியரசுத் தலைவர் செயலகம் கடந்த மார்ச் 28 ஆம் தேதி கருணை மனு குறித்த பரிந்துரையைப் பெற்றது. அதன் பின்னர் துபாரேவின் கருணை மனு குடியரசுத் தலைவரால் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாக கருணை மனுவின் நிலை குறித்து குடியரசுத் தலைவர் மாளிகையின் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாரேவின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

6.4 கிலோ தங்கம் கொள்ளை; நகை பட்டறை ஊழியர்கள் இருவர் கைது

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

6.4 kg gold issue Two jewelry workshop employees arrested

 

சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் தெருவில் நந்தகுமார் என்பவர் நகை பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த சூழலில் நகை பட்டறையில் கடந்த 27 ஆம் தேதி (27.11.2023) சுமார் 6.4 கிலோ அளவிற்கு உருக்கிய தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

 

இது குறித்து நகை பட்டறை உரிமையாளர் நந்தகுமார் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிசிடிவி கேமராவில் பதிவுகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் உருக்கப்பட்ட நகையைத் திருடிச் செல்வது தெரியவந்தது.

 

மேலும் நகை பட்டறையில் பணிபுரிந்து வந்த 6 பேரிடம் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனேவுக்கு விரைந்து சென்று இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கடை ஊழியர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கொள்ளையடிக்கப்பட்ட 6.4 கிலோ தங்கமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 6.4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பிறந்தநாளுக்கு துபாய் கூட்டிச் செல்லாத கணவர்! - அடித்துக் கொன்ற மனைவி! 

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Maharashtra woman Renuka Kahanna arrested in Nikihil Kahnnaa passes away case

 

மஹாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்தவர் நிகில் கண்ணா (36). கட்டட பொறியாளரான இவர், ரேணுகா ஜாகர் கண்ணா(38) என்பவரைக் காதலித்து கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும், புனே வான்வாடி எனும் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்பொழுது தகராறு ஏற்படுவது வழக்கம். அப்பொழுதெல்லாம், நிகில் கண்ணாவின் தந்தையும் மருத்துவருமான புஷ்பராஜ் கண்ணா வந்து சமாதானம் செய்து வந்துள்ளார். 

 

இந்நிலையில், நேற்று (24ம் தேதி) ரேணுகா, நிகிலின் தந்தை புஷ்பராஜ்க்கு போன் செய்து அவருக்கும் தன் கணவருக்கும் இடையே சண்டை எனவும் அதன் காரணமாக வீட்டிற்கு வாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புஷ்பராஜ், உடனடியாக கிளம்பி தன் மகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் காரை நிறுத்தியபோது, மீண்டும் போன் செய்த ரேணுகா, ‘அவசரம், சீக்கிரம் வாங்கள்’ எனச் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனால், பதறிப் போன புஷ்பராஜ், விறுவிறுவென அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள தனது மகன் வீட்டிற்கு ஓடியுள்ளார். அங்கு சென்று தன் மகன் வீட்டிற்குள் நுழைந்தபோது, அவரது மகன் நிகில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து வீழ்ந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு பதறிப்போன புஷ்பராஜ், உடனடியாக மகனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், நிகில் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

 

Maharashtra woman Renuka Kahanna arrested in Nikihil Kahnnaa passes away case

 

இதனைத் தொடர்ந்து இந்தத் தகவல் வான்வாடி போலீஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு விரைந்த போலீஸார் நிகில் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும், நிகிலின் தந்தை புஷ்பராஜ், தனது மகனை அவரது மனைவிதான் கொலை செய்திருக்க வேண்டும் எனப் போலீஸில் புகார் அளித்துள்ளார். 

 

அந்தப் புகாரில், 2017ம் ஆண்டு என் மகனும் ரேணுகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்குத் திருமணம் நடந்த சில மாதங்களில் இருந்தே இருவருக்கும் இடையே சண்டை வரும். அப்பொழுதெல்லாம்  நான் வந்து அவர்களை சமாதானம் செய்து வைத்துவிட்டுச் செல்வேன். 

 

கடந்த செப்.18ம் தேதி ரேணுகாவின் பிறந்தநாள் வந்தது. அதற்கு அவர் என் மகனை துபாய்க்கு அழைத்து செல்ல வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் துபாய்க்கு செல்ல முடியாமல் போயுள்ளது. இதனால் என் மகன் நிகில் மீது ரேணுகாவுக்கு கோவம். அதுமட்டுமல்லாமல், நவ.5ம் தேதி அவர்களது திருமண நாள் அன்றும் நிகில், ரேணுகாவுக்கு பரிசு பொருட்களை வழங்கவில்லை எனும் கோவம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் சமீபகாலமாக அடிக்கடி சண்டை வந்தது. ரேணுகாவின் உறவினர்கள் வீட்டு விஷேசத்திற்கு அவரை டெல்லி அழைத்து செல்லாததும் அவருக்கு நிகில் மீது கோவம் இருந்தது. இதன் காரணமாகவே, நிகிலை ரேணுகா தாக்கியுள்ளார். அதில் என் மகன் இறந்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார். 

 

Maharashtra woman Renuka Kahanna arrested in Nikihil Kahnnaa passes away case

 

இந்தப் புகாரைக் கொண்டு போலீஸார் ரேணுகா மீது ஐ.பி.சி. 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், போலீஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கும்போது, நிகிலுக்கும் ரேணுகாவுக்கும் இடையே நேற்று (24ம் தேதி) இரவு வாய் தகராறு நடந்ததுள்ளது. அதில், ஆத்திரம் அடைந்த ரேணுகா நிகில் மூக்கின் மீது குத்தியுள்ளார். இதில் அவரது மூக்கும் சில பற்களும் உடைந்துள்ளது. மூக்கு உடைந்ததால், அவரது சுவாசம் நின்று மரணித்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மூக்கும், பற்களும் உடையும் அளவிற்கு ரேணுகா கையால்தான் தாக்கினாரா அல்லது வேறு ஏதேனும் பொருள் கொண்டு தாக்கினாரா என்பது தெரியவில்லை. தற்போது ரேணுகா சிறையில் உள்ளார். அவரிடம் முழு விசாரணை முடிந்த பிறகும், நிகிலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுமே கொலைக்கான காரணமும், ரேணுகா நிகிலை கையால்தான் அடித்தாரா அல்லது வேறு ஏதேனும் பொருளைக் கொண்டு தாக்கினாரா என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்கின்றனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்