Skip to main content

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமனம்!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021

 

jl

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இந்திய அணி தற்போது டி20 உலககோப்பையில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்த நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டவர்களை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த டி20 உலககோப்பைக்கு பிறகு வரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஷான் கிஷன் மீது ஒழுங்கு நடவடிக்கையா? விளக்கமளித்த டிராவிட்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Disciplinary action against Ishan Kishan? Explained by Dravid

இந்திய அணியின் வளர்ந்து வரும் இளம் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் இஷான் கிஷன். உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர், பிறகு கில் வந்ததாலும், அணியின் விக்கெட் கீப்பராக ராகுல் செயல்பட்டதாலும் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், டெஸ்ட் போட்டிகளுக்கு முன் மனச்சோர்வு காரணமாக சிறிது காலம் ஓய்வு தேவைப்படுவதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் ராகுல் கீப்பராக செயல்படுவதால் தனக்கு இடம் கிடைக்காது என்பதாலும், தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டு வருவதாலும் ஓய்வு எடுத்தார் என்று பரவலாக பேச்சுகள் எழுந்தது.

தற்போது, சஞ்சு சாம்சன் கீப்பராக அணிக்கு திரும்பி இருப்பதாலும், ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி கீப்பராக செயல்படுவதாலும், அடுத்து ரிஷாப் பண்ட் உடல் தகுதி பெற்று விட்டால் அவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதாலும், இனி அணிக்கு அணியில் தனக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பதால், அவர் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெறப்போவதாக வதந்திகள் கிளம்பியது.

இந்நிலையில், நாளை இந்திய ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி மொகாலியில் தொடங்குகிறது. இதை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதல் டி20 போட்டியில் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் எனவும், அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் விராட் கோலி களமிறங்குவார் எனவும் தெரிவித்தார். மேலும் ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய டிராவிட், ஸ்ரேயாஸ் அணியில் தேர்வு செய்யப்படாததற்கான காரணத்தையும் விளக்கினார். அணியில் பல பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ஸ்ரேயாஸை தேர்வு செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.

அப்போது இஷான் கிஷன் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பயிற்சியாளர் டிராவிட், இஷான் கிஷனே இந்த அணி தேர்வுக்கு தன்னை கருத்தில் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும், அவரேதான் தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பு ஓய்வு கேட்டதால், அவரின் உணர்வுகளை மதித்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாகவும் விளக்கினார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னுடைய நிலைத்தன்மையை நிரூபித்தால், அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அணியில் சேர்க்க கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறினார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். 

- வெ. அருண்குமார்  

Next Story

ரோகித் - டிராவிட் ஒரு அற்புதமான ஜோடி - சச்சின் டெண்டுல்கர்!

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

sachin tendulkar

 

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டனாக ரோகித் சர்மா அண்மையில் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில், அவர் இந்திய அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலக நேரிட்டது.

 

இந்தநிலையில் அடுத்து நடைபெறவுள்ள மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது போட்டி தொடரில் ரோகித் சர்மா, இந்திய அணிக்கு திரும்பவுள்ளார். ரோகித் சர்மா, இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்படவுள்ள முதல் தொடராக மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் அமையவுள்ளது. இந்தநிலையில் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் அற்புதமான ஜோடி என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

 

பேக்ஸ்டேஜ் வித் போரியா நிகழ்ச்சியில் சச்சின் கூறியுள்ளதாவது;

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகக் கோப்பையை வென்று 11 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. நான் உட்பட அனைவரும் அந்த கோப்பையை பிசிசிஐயின் அலுவலகத்தில் பார்க்க விரும்புகிறோம். அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இந்த கோப்பைக்காக விளையாடுவார்கள். உலகக்கோப்பையை விட பெரிதானது ஒன்றுமில்லை. இருபது ஓவராக இருந்தாலும் சரி, ஒருநாள் போட்டிகளாக இருந்தாலும் சரி உலகக் கோப்பை வெற்றி என்பது ஒரு சிறப்பு வாய்ந்தது. அப்படித்தான் நான் உணருகிறேன்.

 

ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் ஒரு அற்புதமான ஜோடி. இவர்கள் இருவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளிப்பார்கள் என்பது எனக்கு தெரியும். இருவருக்கும் பலரின் (வீரர்கள்) ஆதரவு இருக்கிறது. சரியான நேரத்தில் அந்த ஆதரவை பெறுவதுதான் முக்கியம். நிச்சயமாக, அனைவரும் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடியுள்ளார்கள். பாதையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு ராகுல் டிராவிட் கிரிக்கெட் விளையாடியுள்ளார். நம்பிக்கையை இழக்காமல் இருப்பது முக்கியமான ஒன்று. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், தொடர்ந்து முன்னேறுவோம் இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.