Skip to main content

“மிட்டாய் பரிசு தந்திரங்கள் எடுபடாது;10 ஆண்டு பாவங்கள் கழுவப்படாது” - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் 

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

'Don't take candy gift tricks; 10 years of sins won't wash away' - Mallikarjuna Kharge Review

 

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது தேர்தல் தோல்வி பயம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ‘ரக்‌ஷா பந்தன், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பரிசாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். சகோதரிகளுக்கு பிரதமர் மோடி வழங்கும் பரிசுதான் இந்த சிலிண்டர் விலை குறைப்பு.

 

'Don't take candy gift tricks; 10 years of sins won't wash away' - Mallikarjuna Kharge Review

 

ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த விலை குறைப்பையும் சேர்த்து 400 ரூபாயை குறைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த விலை குறைப்பு வர்த்தக ரீதியில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு இன்று (30.09.2023) முதல் அமலுக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை குறைப்பின் மூலம் நாடு முழுவதும் 31 கோடி பயனாளர்கள் பயனடைவர்.’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 417 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்தே வந்தது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1,118 ரூபாயாக உள்ளது. ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 700 ரூபாய் வரை விலையை உயர்த்திய பாஜக தற்பொழுது 200 ரூபாய் விலை குறைத்துள்ளது.

 

'Don't take candy gift tricks; 10 years of sins won't wash away' - Mallikarjuna Kharge Review

 

இந்த விலை குறைப்புக்கு காரணம் தேர்தல் தோல்வி பயம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, 'வாக்குகள் குறையும்போது தேர்தல் பரிசுகள் வழங்கப்படும். சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்டுள்ள நாடகம். பொதுமக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை கருணையின்றி கொள்ளையடித்த மோடி அரசு., தாய்மார்கள், சகோதரிகள் மீது காட்டும் போலியான பாசம் இது. 400 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய சமையல் எரிவாயு சிலிண்டரை 1,100 ரூபாய்க்கு விற்ற அரசு மோடி அரசு. சாமானியர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தது. சாமானியர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்த மோடி அரசுக்கு முன்பே இந்த யோசனை வராதது ஏன்?

 

140 கோடி இந்தியர்களை ஒன்பது ஆண்டுகளாக சித்ரவதை செய்துவிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் மிட்டாய் பரிசு வழங்கும் தந்திரங்கள் எடுபடாது. கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் செய்த பாவங்கள் இதன் மூலம் கழுவப்படாது. இதனை பாஜக உணர வேண்டும். பாஜக அரசால் உருவாக்கிய பணவீக்கத்தை சமாளிக்க பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை தருகிறது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இது தொடங்கப்பட்டு விட்டது. 200 ரூபாய் விலை குறைப்பு என்பது மக்களின் கோபத்தை தணிக்காது என்பதை மோடி உணர வேண்டும். இந்தியா கூட்டணியை கண்டு மோடி அச்சப்படுவது நன்றாகத் தெரிகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.