Skip to main content

மாடுகளுக்கு போர்வை வாங்கி கொடுத்தால் துப்பாக்கி லைசென்ஸ் - கலெக்டர் வழங்கிய ஆஃபர்!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019


உத்திரபிரசேதம் மாநிலம் விநோதங்களுக்கு எப்போதும் பெயர் போனது. அந்த மாநில அரசு மனிதர்களை விட மாடுகள், குரங்குகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்தும். மேலும், மாடுகளுக்கு என்றே தனி ஆம்புலன்ஸ் வாகனத்தை வைத்துள்ளது. சில வாரங்களுக்கு மின்பு கூட மாடுகளை குளிரில் இருந்து காப்பாற்ற அவைகளுக்கு ஜெர்கின் வாங்க பல கோடிகளை மாநில அரசு ஒதுக்கியது.



இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் 10 மாடுகளுக்கு போர்வை வாங்கி கொடுத்தால் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்படும் என்று குவாலியர் மாவட்ட ஆட்சியர் அனுராக் சௌத்ரி அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏற்கனவே மர கன்றுகளை நட்டு அதனுடன் செல்பி எடுத்து வந்தால் லைசென்ஸ் தருவதாக சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாடுகளை குளிர் இருந்து காப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாடு முட்டி காயமடைந்த முதியவர் உயிரிழப்பு

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

chennai old age person cow incident

 

சாலையில் திரிந்த மாடு முட்டியதால் காயமடைந்து சிகிச்சையில் இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வடக்கு மாட வீதியில், கடந்த 18 ஆம் தேதி காலை சுந்தரம் (வயது 80) என்ற முதியவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த காளை மாடு ஒன்று முதியவர் சுந்தரத்தை முட்டித் தூக்கி வீசியது. காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை மாடு முட்டி வீசும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிகளில் சுற்றி திரிந்து கொண்டிருந்த மாடுகளை பிடித்தனர். இதில் முதியவர் சுந்தரத்தை மூட்டித் தூக்கி வீசிய கிர் ரக காளை மாடும் பிடிபட்டது. இந்த மாடு கோவிலுக்குச் சொந்தமான மாடு என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில், கோயில் நிர்வாகம் அதற்கு  மறுப்பு தெரிவித்திருந்தது. அதனையடுத்து பிடிக்கப்பட்ட அந்த மாட்டை காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாடு முட்டியதில் காயமடைந்து கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த முதியவர் சுந்தரம் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

 

 

Next Story

மாட்டைக் கடத்தியதாக இளைஞர் அடித்து கொலை; பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் கைது

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

maharashtra thane district cow shifted van one youngster incident

 

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியில் கால்நடைகளை ஏற்றிக்கொண்டு 3 பேருடன் கடந்த 8 ஆம் தேதி சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது பசுக்காவலர்கள் என்று கூறிக்கொண்டு சுமார் 10 முதல் 15 பேர் அந்த வாகனத்தை மறித்துள்ளனர். இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்களிடம் மாடுகள் வெட்டுவதற்காக வாகனத்தில் கடத்தப்படுவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகராறு செய்தனர்.

 

இதையடுத்து வாகனத்தை கைப்பற்றிய கும்பல் அதனை நாசிக் மாவட்டம் இகத்புரி என்ற இடத்தை அடுத்துள்ள காதன்தேவி என்ற பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்த 3 பேரையும் தாக்கி உள்ளனர். வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாது 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த கும்பலிடம் சிக்கிய லக்மண் அன்சாரி (வயது 23) என்ற இளைஞரை கடுமையாக தாக்கி விட்டு அந்த கும்பல் தலைமறைவாகிவிட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அன்சாரி, பின்னர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கடந்த 10 ஆம் தேதி லக்மண் அன்சாரி காதன்தேவி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் லக்மண் அன்சாரி இறப்பு குறித்து தெரிவிக்கையில், அவர் பள்ளத்தாக்கில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.