Skip to main content

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மேலும் அதிகரிப்பு; ஒரே மாதத்தில் 3- வது முறையாக உயர்வு!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

domestic gas cylinder price hike peoples

 

ஒரே மாதத்தில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சேலத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 828 ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவில் கேஸ் சிலிண்டருக்கான தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்துகொள்ள எண்ணெய் நிறுவன கூட்டமைப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

 

அதன்படி, ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில், அதற்கு அடுத்த மாதத்திற்கான புதிய விலை நிர்ணயம் செய்யப்படுவது நடைமுறை. ஆனால் அண்மைக் காலமாக இந்தியாவில், ஒரே மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை கேஸ் சிலிண்டர் விலையை மறு நிர்ணயம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. 

 

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமல்லா எல்பிஜி சிலிண்டர் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் வழக்கமான நடைமுறையை மீறி 4- ஆம் தேதியன்று நிர்ணயம் செய்யப்பட்டது. அன்று 25 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதனால் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை 710- ல் இருந்து 735 ரூபாயாகவும், சேலத்தில் 728- ல் இருந்து 753 ரூபாயாகவும் அதிகரித்தது. டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இதன் விலை 719 ஆகவும், கொல்கத்தாவில் 745.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. 

 

அப்பாடா... இத்துடன் விலையேற்றம் முடிந்து போனது என்று நடுத்தர வர்க்கத்தினர் பெருமூச்சு விட்டிருந்த நிலையில், திடீரென்று பிப். 15- ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் சேலத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை 753- ல் இருந்து 803 ரூபாயாக உயர்ந்தது. சென்னையில் 735- ல் இருந்து 785 ரூபாயாக அதிகரித்தது. 

 

திடீர் திடீரென்ற கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், நடப்பு மாதத்தில் மூன்றாவது முறையாக வியாழனன்று (பிப். 25) எல்பிஜி சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தால் சேலத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை 803- ல் இருந்து 828 ரூபாயாகவும், டெல்லி, மும்பையில் 794 ரூபாயாகவும், கொல்கத்தா நகரில் 820.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

 

அதேநேரம், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் விலையைக் கடந்த மாதத்தைக் காட்டிலும், பிப்.25- ஆம் தேதியன்று, 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதம் பிப். 1- ஆம் தேதி, வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை தடாலடியாக 191 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இரண்டு தவணைகளில் மொத்தம் 24 ரூபாய் விலை குறைத்துள்ளனர். 

 

மேலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் மூன்று தவணைகளில் மொத்தம் 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, அனைத்து தரப்பு மக்களையும் பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.