Advertisment

பாதுகாப்புப் பணிக்கு இடையே தமிழில் முனைவர் பட்டம்.. ஐ.ஆர்.பி.என் தலைமைக் காவலருக்கு முதல்வர் நாராயணசாமி பாராட்டு! 

PUDUCHERRY

புதுச்சேரி திருக்கனூர் அருகேயுள்ள குமாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(39). ஐ.ஆர்.பி.என் தலைமைக் காவலரான இவர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் பி.ஏ இளநிலை தமிழ், லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரியிலும், எம்.ஏ முதுநிலை, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திலும் பயின்றார்.

Advertisment

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்மொழியியல் எம்.ஃபில் படிப்பு முடித்தார். தொடர்ந்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பி.எச்.டி பகுதி நேரப் படிப்பில் சேர்ந்தார்.

Advertisment

இதனிடையே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிக் கொண்டேபணிகளுக்கு இடையே தமிழில் 'வெண்பாவும் பாடுபொருளும்' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு நடப்பாண்டில் முனைவர் பட்டம்பெற்றார்.இந்நிலையில் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற சரவணனை சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில், முதல்வர் நாராயணசாமி பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.

Narayanasamy Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe