32 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மருத்துவர், ரோபோ மூலம் இதய அறுவைசிகிச்சை

doc

உலகில் முதல்முறையாக ரோபோ மூலம் ஆஞ்சியோ ஆபரேஷன் செய்து இந்தியாவில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த தேஜாஸ் படேல் என்ற மருத்துவர் இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டார். மருத்துவமனையிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபடியே ஆபரேஷன் தியேட்டரில் இருந்த ரோபோ மூலம் அவர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து நோயாளி நலமுடன் உள்ளார், கூடிய விரைவில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக இவ்வளவு தூரத்திலிருந்து இதய அறுவைசிகிச்சையை ரோபோ மூலம் வெற்றிகரமாக செய்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதனை செய்த மருத்துவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Doctor Gujarath India Operation robot
இதையும் படியுங்கள்
Subscribe