டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி ட்விட்டரில் அவரை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'நம் நாட்டிற்காக அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். அம்பேத்கரின் லட்சியங்களும், எண்ணங்களும், பல்லாயிரக்கணக்கானோருக்கு பலம் தருகின்றன.' என குறிப்பிட்டுள்ளார்.