Skip to main content

ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக தரக்கூடாது; ஐ.சி.எம்.ஆர். எச்சரிக்கை

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

Do not over-prescribe antibiotics; ICMR alert

 

மக்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றுக்கே ஆன்டிபயாடிக் மருந்தினை மருத்துவர்கள் தரக்கூடாது என்று மருத்துவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர். எனப்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

 

ஆன்டிபயாடிக் மருந்துகள் உலகம் முழுவதும் மருத்துவர்களால் அதிகளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. உலகளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளும் மக்கள் இந்தியாவில் அதிகளவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு முழுவதும் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் கார்பெனம் எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்து அதிகமான மக்களுக்கு பலனளிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

 

இந்நிலையில், ஆன்டிபயாடிக் என்று அழைக்கப்படுகின்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தோல் மற்றும் மெல்லிய திசு நோய்த்தொற்றுகளுக்கு 5 நாட்களுக்கும், சமூக அளவில் பரவியுள்ள நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், நிமோனியா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரலாம்.

 

லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்து தருவதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். பொதுவாக, ரத்தம் அல்லது பிற திசுக்களில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் இருப்பு மற்றும் அவற்றின் இருப்புக்கு உடலின் எதிர்வினை ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் ஒரு தீவிர நிலை கொண்ட நோயாளிகளுக்கும் வழங்கலாம்.

 

பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பு, மரணத்திற்கு வழிவகுக்கும் செப்சிஸ் மற்றும் அதன் தீவிரநிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், சமூக அளவிலான நிமோனியா பாதித்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப் பரிந்துரைக்கப்படுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனா பரிசோதனை- புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ஐ.சி.எம்.ஆர்!

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

Corona test- ICMR releases new guidelines!

 

கரோனா பரிசோதனை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ஐ.சி.எம்.ஆர். அதன்படி, கரோனா உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய் உள்ளவர்கள் தவிர அறிகுறி இல்லையென்றால் மற்றவர்கள், கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை. 

 

மாநிலங்களுக்கு இடையே உள்ளூர் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை அவசியமில்லை. வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்கள், கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதில்லை. இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறி இருப்பவர்களும், கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த இணைநோய் இருப்பவர்களும், சர்வதேச பயணிகளும் கட்டாயம் கரோனா பரிசோதனை உட்படுத்தப்பட வேண்டும் என ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது. 


 

Next Story

"கரோனா தடுப்பூசி தொற்று ஏற்படுவதை தடுக்காது" - ஐசிஎம்ஆர் விளக்கம்!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

icmr

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதேபோல் ஒமிக்ரான் பாதிப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனையொட்டி கரோனாவை பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு, மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஐசிஎம்ஆர் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா, கரோனா தடுப்பூசி கரோனா  தொற்று ஏற்படுவதை தடுக்காது என எச்சரித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, "அனைத்து கரோனா தடுப்பூசிகளும், அவை இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து அல்லது சீனா என எந்தநாட்டை சேர்ந்தவையாக இருந்தாலும், அவை முதன்மையாக நோயின் தன்மையை மாற்றக்கூடியவை. அவை தொற்று ஏற்படுவதை தடுக்காது. முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) டோஸ்கள் முதன்மையாக நோய் தொற்றின் தீவிரத்தை குறைக்கவும், மருத்துவமனையில் சேர்க்கப்படுத்தல் மற்றும் மரணத்திற்கான வாய்ப்பையும் குறைக்கவும் செலுத்தப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து "தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன்னரும் பின்னரும் முகக்கவசங்களை பயன்படுத்துவது அவசியம். மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டு தனிமை என்பது கரோனா சிகிச்சை முறையில் முக்கிய தூணாக இருக்கிறது" எனவும்  பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.