மோடி ஆதரவாளர்கள் முட்டாள்கள்; திவ்யா ஸ்பந்தனா பதிவால் ட்விட்டரில் மோதல்...

பிரதமர் மோடியை குறித்து முன்னாள் நடிகையும், கர்நாடக காங்கிரஸ் உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா பதிவிட்ட ட்வீட் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

divya

மோடியை விமர்சிப்பதும், அந்த விமர்சனத்தால் சர்ச்சையில் சிக்குவதும், பின் கட்சி மேலிடத்தால் கண்டிக்கப்படுவதும் திவ்யாவிற்கு புதிதல்ல. அந்த வகையில் அவர் இன்று பதிவிட்ட ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடியின் புகைப்படத்தின் மீது "உங்களுக்குத் தெரியுமா? மோடியின் ஆதரவாளர்களில் மூவரில் ஒருவர் முட்டாள்கள்.. மற்ற இருவரைப் போலவே" என எழுதி பதிவிட்டதோடு இவர்கள் எனக்குப் பிரியமானவர்கள்! மகிழ்ச்சிகரமானது அல்லவா? என அந்தப் படத்திற்கு தலைப்பிட்டிருக்கிறார்.

இது தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே ட்விட்டரில் மிகப்பெரிய மோதலை உருவாகியுள்ளது. இரு தரப்பினரும் மற்றவர்களை தாக்கி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் பிரதமரை 'திருடன்' என்று விமர்சித்ததற்காக அவர் மீது தேசவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

divya sapndana modi
இதையும் படியுங்கள்
Subscribe