Skip to main content

நடைபயிற்சி சென்ற நீதிபதி திட்டமிட்டு கொலை... வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

District judge incident while walking ...  CCTV footage released!

 

நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மாவட்ட நீதிபதி விபத்திற்குள்ளாகி உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நிலையில், அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் வாயிலாக உறுதியாகியுள்ளது. 

 

ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாத் நகரில் நடைபயிற்சிக்காகச் சென்ற மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்தின் உடல் சாலையோரம் கண்டறியப்பட்டது. அதிவேகமாக வந்த வாகனங்கள் இடித்து, அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று காவல்துறையினர் முதலில் கருதினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்துக்கு மிக நெருக்கமாகச் சென்ற சிறிய ரக சரக்கு வாகனம், அவரை இடித்துவிட்டு அதிவேகமாக அங்கிருந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. 
 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Look how additional district &amp; sessions Judge, Dhanbad Uttam Anand was murdered.<br><br>An auto intentionally went to the side of road and hit him. <br><br>Twitter pe kaam ki baat ka dhong karne wale <a href="https://twitter.com/HemantSorenJMM?ref_src=twsrc%5Etfw">@HemantSorenJMM</a> ke state mei law and order ka haal ye hai. <a href="https://t.co/1g95MKX8dT">pic.twitter.com/1g95MKX8dT</a></p>&mdash; Ankur (@iAnkurSingh) <a href="https://twitter.com/iAnkurSingh/status/1420424551490412545?ref_src=twsrc%5Etfw">July 28, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

அதைத் தொடர்ந்து, மாவட்ட நீதிபதி உயிரிழந்ததைக் கொலை வழக்காக மாற்றி பதிவுசெய்த காவல்துறையினர், கொலையாளிகளைத் தீவிரமாக தேடிவருகின்றனர். 

 

இதனிடையே, மாவட்ட நீதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டறிந்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று (29/07/2021) விசாரணை நடைபெறுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.