கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த17 எம்எல்ஏக்களை கர்நாடக சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துதகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதியும் வழங்கியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட சபாநாயகர் தடை விதித்தது சட்டவிரோதமானது எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம் நடப்பு சட்டசபை பதவிக்காலம் முடியும் வரை எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் தடைஉத்தரவு சரியானதல்ல எனவும் தெரிவித்துள்ளது.