Skip to main content

“கிரண்பேடி எங்களுக்கு தொல்லை கொடுத்தபோது ரங்கசாமி வாய் திறந்தாரா...” - நாராயணசாமி கேள்வி

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

'Did Rangasamy open his mouth when Kiranbedi gave us trouble?'-Narayanasamy asked

 

'கையோடு கை கோர்ப்போம்; புதிய ஒற்றுமை பயணம்' என்ற தலைப்பில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி தலைமையில் பேரணி நடைபெற்றது.

 

இந்த பேரணிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி பேசுகையில், “தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள். அதில் விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் நலத் திட்டங்கள், மகளிர் மேம்பாட்டு திட்டம், இளைஞர்கள் வளர்ச்சி போன்றவைகளுக்கு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த முக்கியமான திட்டம் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம். இதனால் அவர்களது வாழ்க்கை தரம் உயரும் என்று சொன்னார்கள். அந்த வாக்குறுதி இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்காக இந்தாண்டு பட்ஜெட்டில் 7,000 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள்.

 

ஆகவே குடும்ப தலைவிகள் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பெற்று சிறப்பாக தங்களுடைய குடும்பத்தை நடத்துவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு அரசு மத்திய அரசு உதவி இல்லாமல் கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தினாலும் கூட மாநிலத்தினுடைய வருவாயைப் பெருக்கி ஒரு சிறப்பான பட்ஜெட்டை தமிழக முதல்வர் தாக்கல் செய்திருக்கிறார். நான் புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கும் போது எனக்கும் என்னுடைய அமைச்சர்களுக்கும் கிரண்பேடி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அப்பொழுது ரங்கசாமி வாயை மூடிக்கொண்டு இருந்தார். குரல் கொடுக்கவில்லை. இப்பொழுது புலம்புகிறார். எனக்கு அதிகாரம் இல்லை; நான் சொல்வதைக் கேட்கமாட்டேன் என்கிறார்கள் என்று புலம்புகிறார்.

 

நாங்களாவது மாற்று ஆட்சி. மத்தியில் பாஜக ஆட்சி, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி. மத்திய அரசு நாங்கள் சொன்னதற்கு செவி சாய்க்கவில்லை. ஆனால் இப்பொழுது கூட்டணி ஆட்சி. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணியிலிருந்தும் முதலமைச்சர் புலம்புகிறார் என்றால் அவருக்கு தெம்பு கிடையாது திராணி கிடையாது. அதனால் தான் புலம்புகிறார்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.