சென்னை வந்தனரா பஹல்காம் பயங்கரவாதிகள்? -நடத்தப்பட்ட அதிரடி சோதனை

Did Pahalgam terrorists come to Chennai? - Special raid conducted

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் இந்திய ராணுவம் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்பு பகுதிக்குச் சென்றஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் சோதனயில் ஈடுபட்டுள்ளனர்.

nn

சென்னை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கொடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில் கொழும்பு விமானநிலையத்தில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேரும் சென்னையில் இருந்து கொழும்பு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்ததாக வெளியான சந்தேக தகவலின்அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

attack Chennai jammu and kashmir srilanka Pahalgam Attack
இதையும் படியுங்கள்
Subscribe