Skip to main content

விமானத்தில் இதுபோன்ற புகைப்படங்கள் எடுக்கத் தடை... டி.ஜி.சி.ஏ எச்சரிக்கை...!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

dgca bans photos inside flight

 

விமானத்துக்குள் இருந்து பயணிகள் விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தடை விதித்துள்ளது. 

 

கடந்த இரு நாட்களுக்கு முன் சண்டிகர்- மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் நடிகை கங்கனா ரணாவத் பயணித்த போது, அவருடன் பயணித்தோர் பாதுகாப்பு விதிகளைமீறி, சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் கங்கானவை புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்தனர். இது தொடர்பாக இன்டிகோ நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், விமானத்துக்குள் இருந்து விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ பயணிகள் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், "பயணிகள் விமானத்தில் யாரேனும் விதிமுறைகளை மீறி புகைப்படம், வீடியோ எடுத்தது கண்டறியப்பட்டால், அந்த விமானம் அந்த குறிப்பிட்ட வழித்தடத்தில் இருவாரங்கள் இயக்க தடை விதிக்கப்படும்.

 

விமான விதி 1937, விதி 13-ன் கீழ் விமானத்தில் பயணிக்கும் எந்தப் பயணியும் விமானத்துக்குள் புகைப்படம் எடுக்கக்கூடாது. விமானப் போக்குவரத்து அமைச்சகம், டி.ஜி.சி.ஏ அனுமதியின்றி புகைப்படம் எடுத்தல் கூடாது. இந்த விதிமுறைகள் ஏற்கனவே இருந்தபோதிலும், சில சமயங்களில், விமான நிறுவனங்கள் இந்த நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறிவிட்டன. இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.