Devotees gathered at Sabarimala!

விடுமுறை நாளான இன்று (05/12/2021) சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Advertisment

கரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய தினம அதிகபட்சமாக 34,900 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இன்றும் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. சுமார் 40,700 பேர் தரிசனம் செய்வதற்காக இன்று முன்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

வரும் நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிவதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்கள் அனைவரும் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.