Skip to main content

தோனி பக்கம் திரும்பிய ராம பக்தர்கள்; இன்ஸ்டாவில் பனிப்போர்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
devotees are criticizing dhoni for not attending the opening ceremony of the Ram temple

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ரூ.2000 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில், கடந்த ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு கோயிலை திறந்து வைத்தார். இந்நிகழ்விற்காக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பொது விடுமுறையும் சத்தீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு முழுநாள் விடுமுறையும், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், ஹரியானா, ஒடிஷா, ராஜஸ்தான், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அரைநாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மேலும், நாடு முழுவதும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டது.

ad

இப்படி மாநிலங்களில் பொது விடுமுறை, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கி திறக்கப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு இந்தியாவிலுள்ள பிரபல சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் உள்ள பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று சிலர் பங்கேற்றனர், சிலர் பங்கேற்கவில்லை. 

அந்தவகையில், கோலிவுட்டிலிருந்து  நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், டோலிவுட்டிலிருந்து நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண் ஆகியோரும், பாலிவுட்டிலிருந்து ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். கிரிக்கெட் நட்சத்திரங்களான ஜடேஜா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உட்பட பலர் கலந்துகொண்டனர். ராமர் கோயில் திறப்பு விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலந்து கொள்ளவில்லை. இதனால், ராம பக்தர்கள் தோனியை விமர்சித்து வருகின்றனர். 

devotees are criticizing dhoni for not attending the opening ceremony of the Ram temple

தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுதியாக தனது பிறந்தநாளான ஜூலை 7 அன்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவின் கமெண்டில், ராம பக்தர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், தோனியின் ரசிகர்கள் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர், ‘கோயிலுக்குச் செல்வது தோனியின் தனிப்பட்ட சொந்த முடிவு’ என பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

கோடை காலம்... அயோத்தி ராமருக்கு பருத்தி ஆடை!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Cotton clothes for Ayodhya Ram

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொது தரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், ராமர் சிலைக்கு பருத்தி ஆடை அணிவிக்கப்படும் என ராம ஜென்மபூமி தீர்த்த  சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது. கோடை காலத்தையொட்டி அயோத்தி ராமர் சிலைக்கு இன்று முதல் பருத்தி ஆடை அணிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வண்ணம் பூசப்பட்ட கைகளால் நெய்த ஆடைகளை ராமருக்கு அணுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், கோடை காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்துள்ளதால், அயோத்தி ராமருக்கு இன்று முதல் பருத்தி உடை அணிவிக்கப்படும் என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.