தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, " மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருடன் ஒரு போதும் நாங்கள் சண்டையிட்டதில்லை. அவர் ஏன் தேவையில்லாத சூழ்நிலைகளை உருவாக்குகிறார். உத்தரவுகள் எங்கு இருந்து வருகின்றன என்பது எங்களுக்கு தெரியும்.
ADVERTISEMENT
பிரதமர் கூட இப்படி நடந்து கொள்ளவில்லை. மராட்டிய முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான். அவருக்கு பெரும்பான்மை இல்லை. தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பு அவர் முதலில் பதவிப் பிரமாணம் ஏற்று இருக்கக் கூடாது" என்றார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments