ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்தித்தார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி. இந்த சந்திப்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சிவகங்கை மக்களவை தொகுதியின் உறுப்பினரும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
அப்போது சோனியா காந்தி, கார்த்தி சிதம்பரத்திடம் ப.சிதம்பரத்திற்காக காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று கூறியதாக தகவல்கள் கூறுகின்றனர்.