டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு 'பாரத் ரத்னா' விருதை வழங்கினார் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்திய நாட்டில் மிக உயரிய விருது 'பாரத் ரத்னா' என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் அசாம் பாடகர் பூபேன் ஹசாரிகாவுக்கும், சமூக செயற்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் உள்ளிட்டோர்களுக்கும் 'பாரத் ரத்னா' விருதை குடியரசுத்தலைவர் வழங்கினார்.