விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டிஸ்; பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு!

farmers

மத்திய அரசின்புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராகடெல்லியில் போராடி வரும் விவசாயிகள்,குடியரசு தினத்தன்று நடத்தியட்ராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. மேலும் செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடியும் ஏற்றப்பட்டது.

ட்ராக்டர் பேரணியில்காவல்துறையினர் விதித்தவிதிமுறைகளையும், நிபந்தனைகளையும் விவசாயிகள் மீறியதால் வன்முறை நடந்ததாகடெல்லிகாவல்துறைதெரிவித்துள்ளது.

மேலும் நிபந்தனைகளை மீறியதுதொடர்பாக விளக்கம் கேட்டு, யோகேந்திர யாதவ், பல்தேவ் சிங் சிர்ஸா, பல்பீர் எஸ் ராஜீவால் உள்ளிட்ட 20 பேருக்குடெல்லிகாவல்துறைநோட்டீஸ்அனுப்பியுள்ளது. மேலும் இந்த நோட்டீஸிற்கு அவர்கள் மூன்று நாட்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுக்கு எதிராகலுக் - அவுட்நோட்டீஸ்பிறப்பிக்கவும், அவர்களதுபாஸ்போர்ட்டைபறிமுதல் செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லிகாவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

delhi police farmbill Farmers
இதையும் படியுங்கள்
Subscribe