Skip to main content

டெல்லியில் தற்போதைய சூழல் என்ன..? காவல் ஆணையர் பதில்...

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன.

 

delhi police commissioner about delhis current situation

 

 

இந்த கலவரங்களில் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியின் தற்போதைய சூழல் குறித்து டெல்லி சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "வன்முறை ஏற்பட்ட வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கைது நடவடிக்கைகளும் தொடங்கும். இதுவே இயல்பு நிலை திரும்புவதற்கு பங்களிக்கும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்