Skip to main content

கரோனா சிகிச்சைக்காக 'பிளாஸ்மா வங்கி' தொடங்கும் டெல்லி அரசு...

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

Delhi government has decided to start a 'Plasma Bank' in Delhi

 

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் பிளாஸ்மாக்களை சேகரிக்க 'பிளாஸ்மா வங்கி' தொடங்கவுள்ளது டெல்லி அரசு. 

 

இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இன்று காலை நிலவரப்படி 5,491,97பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,16,487 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,774 ஆக உயர்ந்துள்ள நிலையில், கரோனா பாதித்த 2,10,936 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு விதமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கரோனா பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த, பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலனளிப்பதாக ஆரம்பம் முதல் டெல்லி அரசு தெரிவித்து வருகிறது.

 

கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நபர்களின் உடலிலிருந்து எடுக்கப்படும் கரோனா எதிர்ப்புச் சக்தியைக் கொண்ட பிளாஸ்மாவை கொண்டு, சிகிச்சையளித்தால் நோயாளிகள் விரைவில் குணமடைவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து வருகிறார். டெல்லியில் இந்த முறை நல்ல பலனைக் கொடுத்ததையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சையளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் பிளாஸ்மாக்களை சேகரிக்க பிளாஸ்மா வங்கி தொடங்கவுள்ளது டெல்லி அரசு.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக டெல்லியில் 'பிளாஸ்மா வங்கி' தொடங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. 'பிளாஸ்மா வங்கி' அடுத்த இரண்டு நாட்களில் செயல்படத் தொடங்கும். குணமடைந்த நோயாளிகள் அவர்களின் பிளாஸ்மாவை தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். சிகிச்சைக்காக பிளாஸ்மா தேவைப்படும் அனைவருக்கும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பிளாஸ்மா வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.