delhi excise case related additional charge sheet submitted court

Advertisment

டெல்லி 32 மண்டலங்களாகப் அண்மையில் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர்மணீஷ்சிசோடியாவுக்குசொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதிமணீஷ்சிசோடியாவைசிபிஐஅதிரடியாககைது செய்திருந்தது.

இது தொடர்பாக மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குசிபிஐசம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லியில் உள்ளசிபிஐதலைமை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு நேரில்ஆஜராகி விளக்கமளித்தார்.சுமார் 9 மணி நேரம் இந்தசிபிஐவிசாரணை நடைபெற்றது.

மேலும் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல்குற்றப்பத்திரிகையைத்தாக்கல் செய்துள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், "தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும்,சட்டமேலவைஉறுப்பினருமான கவிதா உட்பட சில தொழிலதிபர்கள் கொண்டசவுத்குரூப்மதுபான குழுமத்திடமிருந்துபெற்ற 100 கோடி ரூபாயின் ஒரு பகுதியை ஆம்ஆத்மிகட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா சட்டமன்ற தேர்தல்செலவுகளுக்குப்பயன்படுத்தி உள்ளது.சேரியாட்புரொடக்ஷன்மீடியாஎன்ற நிறுவனம் வங்கி மூலமாகவும்,ஹவாலாமூலமாகவும் ஆம்ஆத்திக்குப்பணத்தை அனுப்பி உள்ளது" என அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.