Skip to main content

மும்முனை போட்டியில் டெல்லி... தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்பொழுது தொடங்கியுள்ளது. டெல்லியில் கடந்த எட்டாம் தேதி பதிவான வாக்குகள் 21 மையங்களில் எண்ணப்படுகின்றன.

 

Delhi Assembly Elections!

 

கடந்த எட்டாம் தேதி டெல்லியில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.  நடைபெற்ற வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை 21 மையங்களில் தற்போது தொடங்கியுள்ளது. 10 மணிக்கு மேல் முன்னணி நிலவரங்கள்  தெரியவரும். 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்