ADVERTISEMENT

காற்று மாசு: டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!

03:16 PM Nov 03, 2019 | santhoshb@nakk…

டெல்லியின் 9 இடங்களில் இன்று காற்றின் தரக்குறியீடு 900 புள்ளிகளைத் தாண்டியது. பவானா பகுதியில் காற்றின் தரக்குறியீடு 999ஆக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் காற்றின் மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றன. அதேபோல் மக்களுக்கு ஆஸ்துமா, இதயநோய் உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஹரியானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 8- ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே நவம்பர் 5- ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்த நிலையில், நவம்பர் 8- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT