பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இந்திய எல்லை பகுதியான லடாக்கிற்கு சென்றார்.
லடாக்கின் லே பகுதியில் ராணுவ வீரர்களைச் சந்தித்து அவர்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது, "நீங்கள் நாட்டை பாதுகாப்பதைப் போல் நாடும் உங்களைப் பாதுகாக்கும். ராணுவ வீரர்கள் தங்கள் பிரச்சனைகளைப் பகிர ஒரு இலவச உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.