deep

Advertisment

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடியின் திருமணம் இத்தாலியில் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து, திருமணம் முடிந்தது என்பதை வெளியுலகுக்கு தெரிவித்துள்ளனர். இந்த திருமணம் குறித்த முதல் புகைப்படமும் இவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள்தான். இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்டவுடன் பாலிவுட் நடிகர், நடிகையர் என்று அனைவரும் தங்களின் வாழ்த்து மழைகளை பொலிந்தனர். அதேபோல ரசிகர்களும் அதை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனால் ட்விட்டரில் நேற்று இந்த ஜோடியின் திருமண புகைப்படங்கள்தான் ட்ரெண்டாக இருந்தது. இந்த திருமண புகைப்படத்தை அடுத்து, இன்னுமொரு விஷயம் அந்த புகைப்படத்தில் வைரலாகி வந்தது. அது தீபிகா அணிந்திருந்த மோதிரம்தான். அந்த வைர மோதிரத்தின் விலைதான் அதை மேலும் வைரலாக்கியுள்ளது என்று சொல்லலாம். அந்த மோதிரத்தின் மதிப்பில் மும்பையில் ஒரு உயர்தர மிடில் க்ளாஸ் வீட்டின் திருமணத்தையே நடத்திவிடலாம் என்று சொல்கின்றனர். அப்படி என்ன அந்த மோதிரத்தின் விலை என்று கேட்கிறீர்களா? அந்த வைர மோதிரத்தின் விலை ரூ1.5 கோடி முதல் ரூ. 2.3 கோடி வரை இருக்குமாம்!